sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விவசாயிக்கு ரூ.3 லட்சம் மின் கட்டணம்

/

விவசாயிக்கு ரூ.3 லட்சம் மின் கட்டணம்

விவசாயிக்கு ரூ.3 லட்சம் மின் கட்டணம்

விவசாயிக்கு ரூ.3 லட்சம் மின் கட்டணம்


ADDED : பிப் 26, 2025 11:21 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: மின் துறை அமைச்சர் ஜார்ஜ் பொறுப்பில் உள்ள சிக்கமகளூர் மாவட்டத்தில், விவசாயிக்கு 13 ஆண்டுகளுக்கு பின், 3 லட்சம் ரூபாய் மின் கட்டண பில் வந்துள்ளது.

சிக்கமகளூரின், சிக்கரனே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உமேஷ். இவர் விவசாய பணிகளுக்கு இலவச மின்சாரத்தில், 10 குதிரை திறன் மோட்டார் பயன்படுத்துகிறார். பல ஆண்டுகளாக அவருக்கு இலவச மின்சாரம் கிடைத்து வந்தது.

தற்போது, 'மெஸ்காம்' எனும் மங்களூரு மின் வினியோக நிறுவனம், திடீரென 3 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தும்படி, விவசாயி உமேஷுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. 15 நாட்கள் கெடு விதித்து, அதற்குள் கட்டணம் செலுத்தா விட்டால், மின் இணைப்பை துண்டிப்பதாக எச்சரித்துள்ளனர்.

மாநிலத்தில் பங்காரப்பா முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே, விவசாய பணிகளுக்கு இலவச மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இப்போது திடீரென மின் கட்டணம் செலுத்தும்படி, மெஸ்காம் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சரியல்ல என, உமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us