sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை கொலை 

/

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை கொலை 

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை கொலை 

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை கொலை 


ADDED : மே 29, 2024 04:21 AM

Google News

ADDED : மே 29, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம் நகர் : வீடு புகுந்து வாலிபரை கொல்ல வந்த கும்பல், தடுக்க வந்த தந்தையை கொலை செய்து தப்பி ஓடியது.

ராம்நகரின் கனகபுரா டவுன் மாதவ் நகரில் வசித்தவர் குண்டய்யா, 45. இவரது மகன் ருத்ரேஷ், 21. இவரது நண்பர் அருண், 21. கடந்த மாதம் யுகாதி கொண்டாட்டத்தின்போது, மது விருந்து வைக்கவில்லை என்பதால், அருணை, ருத்ரேஷ் கத்தியால் குத்தினார். ருத்ரேஷை கனகபுரா போலீசார் கைது செய்து, ராம்நகர் சிறையில் அடைத்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ருத்ரேஷ் ஜாமினில் வந்தார். அவரை கொலை செய்ய அருண், நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். நேற்று முன்தினம் இரவு ருத்ரேஷ் வீட்டிற்குள், அருண், நண்பர்கள் மூன்று பேர் புகுந்தனர். ஹாலில் அமர்ந்திருந்த ருத்ரேஷை ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குண்டய்யா, மகனை காப்பாற்ற முயன்றார். இதனால் அவர் மீது அருணும், நண்பர்களும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பினர்.

தலையில் பலத்த காயம் அடைந்த குண்டய்யா, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். ருத்ரேஷ் அளித்த புகாரில் அருண் உட்பட நான்கு பேரையும், கனகபுரா போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us