sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் குப்பை கிடங்கில் தீ 17 மணி நேரம் போராடி அணைப்பு

/

தங்கவயல் குப்பை கிடங்கில் தீ 17 மணி நேரம் போராடி அணைப்பு

தங்கவயல் குப்பை கிடங்கில் தீ 17 மணி நேரம் போராடி அணைப்பு

தங்கவயல் குப்பை கிடங்கில் தீ 17 மணி நேரம் போராடி அணைப்பு


ADDED : மார் 02, 2025 06:19 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல் நகரின் 35 வார்டுகளில் சேரும் குப்பையை கொட்டப்படும் பாரண்டஹள்ளி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ நேற்று தான் அணைக்கப்பட்டது.

தங்கவயல் நகராட்சி பகுதியில் நாள்தோறும் 50 டன் குப்பை சேருவதாக கூறப்படுகிறது. இந்த குப்பை, பாரண்டஹள்ளி ஏரியின் அருகில் 9 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த கிடங்கில் உரம் தயாரிப்புக்கு தனியாக பிரித்தெடுக்ப்படுகிறது.

இந்த குப்பை கிடங்கு அருகே உள்ள பாறை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்குகுப்பையில் தீப்பிடித்து எரிந்தது.

இதை கவனித்த கிடங்கின் காவலர்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக தங்கவயலில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ கட்டுக்குள் வரவில்லை. இதனால், 20 கி.மீ., தொலைவில் உள்ள பங்கார் பேட்டையின் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து நேற்று காலை 11:00 மணி வரை தீயை அணைத்தனர். 17 மணி நேரத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

உரம் தயாரிப்பு நிலைய கருவிகளுக்கும் சேதம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்துநகராட்சி தலைவர் இந்திரா காந்தி, நகராட்சி அதிகாரிகள் மங்களகவுரி, சசிகுமார்,ஆணையர் பவன்குமார், பொறியாளர் மஞ்சுநாத்ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.

இரண்டு ஏக்கரில் உள்ள குப்பை எரிந்து கருகிசாம்பலானது.

தீ விபத்தால் பாரண்டஹள்ளி, அதன் சுற்றுப்புற பகுதிகள் புகை மண்டலமாக மாறியது.

காலாவதியான கருவிகள்

தீயணைப்பு நிலையத்தில் 4,500 லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயனற்று நிறுத்தப்பட்டிருந்தன. அவசர தேவைக்காக 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய தீயணைப்பு வாகனம் மட்டும் பயன்பாட்டில் இருந்தது.அப்பகுதியினர் கூறுகையில், 'தீயணைப்பு நிலையம் தங்கவயலுக்கும் மிக மிக அவசியம்என்பதால், 2005ல் அமைக்கப்பட்டது. ஆனால், இங்கு காலாவதியான தீயணைப்பு வாகனங்கள் தான் உள்ளன. இதனால் எந்த பயனும் இல்லை. தங்கவயலில் பெயரளவுக்கு மட்டுமே தீயணைப்பு நிலையம் இருந்து வருகிறது' என்றனர்.








      Dinamalar
      Follow us