sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மராத்தா கோட்டாவுக்காக: மனோஜ் ஜாரங்கே 16-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

/

மராத்தா கோட்டாவுக்காக: மனோஜ் ஜாரங்கே 16-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

மராத்தா கோட்டாவுக்காக: மனோஜ் ஜாரங்கே 16-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

மராத்தா கோட்டாவுக்காக: மனோஜ் ஜாரங்கே 16-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

2


ADDED : செப் 10, 2024 09:17 PM

Google News

ADDED : செப் 10, 2024 09:17 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்ரபதி சாம்பாஜிநகர்: மராட்டிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளதாக மனோஜ் ஜாரங்கே அறிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டிய சமூகத்தினரான இதர பிற்பட்ட வகுப்பினர் வகையிலான குன்பி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.

இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னதாக மாநிலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாநில அரசு மராட்டிய இன மக்களுக்கு அரசின் அனைத்து துறைகளிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில் மராத்தா இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜாரங்கே அந்தர்வாலி சாரதி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மராத்வாடா விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது. அதே நாளில் மாராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடி வு செய்யப்பட்டுள்ளது.

மராத்தா வாடா பகுதி இந்தியாவின் சுதந்திரத்தின் போது ஹை தராபாத் நிஜாம் பகுதியின் கீழ் இயங்கி வந்தது.

1948 ம் ஆண்டு செப்.,17 ம் தேதி விவசாயிகள் மற்றும் பலர் நடத்திய போராட்டம் காரணமாக மராத்வாடா பகுதி இந்தி்யாவுடன் இணைந்தது.

கடந்த திங்கட்கிழமை மாநில சிறுபான்மை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் போனில் பேசுகையில் மராத்தா கோரிக்கை நிறைவேற்றுவதாகவும், அனைத்து மராட்டிய இன மக்களுக்கும் குன்பி சான்றிதழ் வழங்குவதாகவும் கூறினார். மேலும் இது குறித்து மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே விடம் பேசுவதாகவும் கூறினர் என மனோஜ்ஜாரங்கே கூறினார்.






      Dinamalar
      Follow us