ADDED : ஆக 16, 2024 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷில்லாங்க்: காங்.,மூத்த தலைவரும்,மேகாலயா முன்னாள் முதல்வருமான எஸ்.சி. மாராக், 82 உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக 12-ம் தேதி தூரா மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் என்ற மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
காங்.கட்சியில் உயர் பதவியில் இருந்த எஸ்.சி.மாராக் 1993- 98 ம் ஆண்டுகளில் மேகாலயா முதல்வராக பதவி வகித்தார். மேகாலயா அரசியலில் ‛‛மிஸ்ட் க்ளீன்'' எனவும் அழைக்கப்பட்டார். இவரது சொந்த தொகுதியான ரீசுல்பெராவில் நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

