ADDED : ஏப் 21, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகன்னடா: அலையின் ஆர்ப்பரிப்பில் சிக்கிய விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் இருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
உத்தரகன்னடா பட்கலின் மாவினகுர்வே துறைமுகத்தில் இருந்து, மஹாதேவா கார்வி என்பவருக்கு சொந்தமான, 'ஓம் மஹாகணபதி' என்ற பெயர் கொண்ட விசைப்படகில், நான்கு மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று காலை, கடலுக்குள் சென்றனர்.
சில கி.மீ., துாரம் சென்ற போது, திடீரென ராட்சத அலைகள் எழுந்ததில் அதில் சிக்கிய விசைப்படகு, கடலில் முழ்கியது. அப்போது வேறொரு படகில் சென்றவர்கள், உடனடியாக உதவிக்கு சென்றனர். நான்கு மீனவர்களை காப்பாற்றி, கரைக்கு அழைத்து வந்தனர்.

