sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மொபைல்போன் பறித்து வந்த வழிப்பறி கும்பல் கைது

/

மொபைல்போன் பறித்து வந்த வழிப்பறி கும்பல் கைது

மொபைல்போன் பறித்து வந்த வழிப்பறி கும்பல் கைது

மொபைல்போன் பறித்து வந்த வழிப்பறி கும்பல் கைது


ADDED : ஜூன் 20, 2024 09:58 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்லோய்: மொபைல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

அலிகாரைச் சேர்ந்த நரேந்தர், கடந்த 16ம் தேதி மஹாராஜா சூரஜ்மல் ஸ்டேடியத்தில் இருந்து நங்லோய் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது மொபைல் போனைப் பறித்துக்கொண்டு ஸ்கூட்டரில் இரண்டு பேர் தப்பிச் சென்றதாக நங்லோய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ராவ் விஹார், நங்லோய் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, அபய், 22, அங்கித், 32, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் கொடுத்த தகவலின்பேரில், திருட்டு மொபைல் போன்களை வாங்கிய சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஜாங்ரா என்பவரை போலீசார் பிடித்தனர்.

இந்த கும்பலிடம் இருந்து 75 திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்டனர். இவர்களுக்கு 23 வழிப்பறி வழக்குகளில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us