ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்குங்க: பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்குங்க: பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 02:44 PM

புதுடில்லி: டில்லியில் இன்று (ஜூலை 04) பிரதமர் மோடியை ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு நேரில் சந்தித்தார். பிரதமரிடம் ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திரா மாநில நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது. டில்லியில் இன்று பிரதமர் மோடியை ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு நேரில் சந்தித்தார். பல முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பிரதமரிடம் ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். நாளை (ஜூலை 05) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச உள்ளார். தற்போது பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் முக்கியம் வாய்ந்த தலைவராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். இதனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.