sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2வது விமான நிலையம் அமைக்க நகர மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

/

2வது விமான நிலையம் அமைக்க நகர மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2வது விமான நிலையம் அமைக்க நகர மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2வது விமான நிலையம் அமைக்க நகர மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

1


ADDED : ஜூன் 29, 2024 04:29 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:29 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு அருகே 2வது விமான நிலையம் அமைக்க, நகர மக்களிடமிருந்து ஆதரவு பெருகுகிறது.

பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. முதல் முனையத்தில் உள்நாட்டு விமானங்கள் வருகை, புறப்பாடு நடக்கிறது. இரண்டாவது முனையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் வருகை, புறப்பாடு உள்ளது.

இந்த விமான நிலையத்தை ஆண்டுக்கு 52 மில்லியன் பயணியர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பெங்களூரு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி., பாட்டீல் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்தை சுற்றி 150 கி.மீ., சுற்றளவுக்குள் வேறு எந்த விமான நிலையமும் வரக்கூடாது என போடப்பட்டிருந்த ஒப்பந்தம் 2033ல் முடிவடைகிறது. இதனால் இரண்டாவது விமான நிலையத்திற்கு தயாராவது இப்போதே அவசியம் என, அமைச்சர் எம்.பி., பாட்டீல் கூறியுள்ளார்.

இந்நிலையில் பெங்களூரு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க, பெங்களூரு நகரவாசிகளிடமிருந்து ஆதரவு பெருகுகிறது.

இதுகுறித்து, பெங்களூரு நகர்ப்புற ஆர்வலரான அஸ்வின் மகேஷ் கூறியதாவது:

வரும் 2040ம் ஆண்டுக்குள் பெங்களூரு ரூரல் பகுதிகளான நெலமங்களா, சர்ஜாபூர், ஹொஸ்கோட் ஆகிய பகுதிகளில் எத்தனை பேர் வசிப்பார்கள் என்பதை அறிவது முதலில் முக்கியம்.

நகரம் எந்த திசையில் வளர்ச்சி அடையும், எந்த பகுதி அதிக பொருளாதார வளர்ச்சி காணும் என்பதை அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த பகுதியில் விமான நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டட கலை நிபுணர் நரேஷ் நரசிம்மன்:

தேவனஹள்ளியில் விமான நிலையம் வரும் முன்பு, ராம்நகர் சென்னப்பட்டணாவில் விமான நிலையம் அமைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், தேவனஹள்ளியில் விமான நிலையம் வந்தது. பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்துள்ளது. இதனால் பெங்களூரு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பது நல்ல முடிவு தான்.

நகர்ப்புற ஆர்வலர் ரவிசந்தர்:

பெங்களூரு அருகே இரண்டாவது விமான நிலையம் கண்டிப்பாக தேவை. புதிய விமான நிலையம் ராம்நகரில் வரவேண்டும். அங்கு விமான நிலையம் வந்தால் பெங்களூரு, மைசூரு நகரவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.

இதேபோல, இன்னும் பலரும் சமூக வலைதளங்களில், தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us