sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயிலில் ஹவாலா பணம் ரூ.18.46 லட்சம் பறிமுதல்

/

ரயிலில் ஹவாலா பணம் ரூ.18.46 லட்சம் பறிமுதல்

ரயிலில் ஹவாலா பணம் ரூ.18.46 லட்சம் பறிமுதல்

ரயிலில் ஹவாலா பணம் ரூ.18.46 லட்சம் பறிமுதல்

4


ADDED : மார் 06, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:44 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:ஆவணங்களின்றி ரயிலில் கடத்தி வந்த 18.46 லட்சம் ரூபாயை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவை பகுதியில் இருந்து, பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனுக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. கழிப்பறைக்குள் பதுங்கி இருந்த நபரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

அதில், உள்ளாடைக்குள் துணிப்பையில் 18.46 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில், திருநெல்வேலி புளியங்குடி ஜின்னா நகரைச் சேர்ந்த முகமது அப்துல் ரகுமான், 28, என்பதும், வெளிநாட்டு கரன்சி வியாபாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பணத்தை எடுத்துச் செல்லும் வழியில் சிக்கி கொண்டதும் தெரிந்தது.

ரயில்வே பாதுகாப்பு படையினர், பறிமுதல் செய்த பணத்துடன், தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us