sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் கொட்டுது மழை: குளம்போல் ரயில்நிலையம்: சாலைகளில் ஓடுது தண்ணீர்

/

மும்பையில் கொட்டுது மழை: குளம்போல் ரயில்நிலையம்: சாலைகளில் ஓடுது தண்ணீர்

மும்பையில் கொட்டுது மழை: குளம்போல் ரயில்நிலையம்: சாலைகளில் ஓடுது தண்ணீர்

மும்பையில் கொட்டுது மழை: குளம்போல் ரயில்நிலையம்: சாலைகளில் ஓடுது தண்ணீர்

7


UPDATED : ஜூலை 08, 2024 01:11 PM

ADDED : ஜூலை 08, 2024 08:18 AM

Google News

UPDATED : ஜூலை 08, 2024 01:11 PM ADDED : ஜூலை 08, 2024 08:18 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மஹராராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே, ரத்னகிரி, ராய்காட் அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புனே, ரத்னகிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மும்பையில் பல்வேறு இடங்களில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மும்பையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கிய இடங்களை வீடியோ எடுத்து, அப்பகுதி மக்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

50 விமானங்கள் ரத்து


கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us