sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியை கொன்று  கணவர் தற்கொலை

/

மனைவியை கொன்று  கணவர் தற்கொலை

மனைவியை கொன்று  கணவர் தற்கொலை

மனைவியை கொன்று  கணவர் தற்கொலை


ADDED : மே 29, 2024 04:21 AM

Google News

ADDED : மே 29, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி, : எருமை விற்ற பணத்தை குடித்துவிட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

பெலகாவியின் முதலகி புலகாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பா, 41; விவசாயி. இவரது மனைவி எல்லவ்வா, 40. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக, வீட்டில் வளர்ந்து வந்த எருமை மாட்டை, நேற்று முன்தினம் அன்னப்பா விற்றார். அதில் கிடைத்த பணத்தில் மது அருந்திவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தார்.

இதனால் மனைவி கண்டித்தார். இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அன்னப்பா, எல்லவ்வாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றிருந்த மகன்கள், வீட்டிற்கு வந்தபோது, தாயை கொன்று தந்தை தற்கொலை செய்தது தெரிந்தது. முதலகி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us