sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முதல்வர் காலை கழுவி தண்ணீரை குடிக்கிறேன்'

/

'முதல்வர் காலை கழுவி தண்ணீரை குடிக்கிறேன்'

'முதல்வர் காலை கழுவி தண்ணீரை குடிக்கிறேன்'

'முதல்வர் காலை கழுவி தண்ணீரை குடிக்கிறேன்'


ADDED : ஆக 22, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 22, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: “மூடாவில் இருந்து சட்டவிரோதமாக மனைவிக்கு, முதல்வர் சித்தராமையா மனை வாங்கித் தரவில்லை என நிரூபணமானால், அவரது காலை கழுவி தண்ணீர் குடிக்கிறேன்,” என, ஷிவமொகா பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சவால் விட்டு உள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'மூடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு வீட்டுமனை வாங்கி தரவில்லை' என, முதல்வர் சித்தராமையா கூறுகிறார். அப்படி என்றால் விசாரணையை எதிர்கொள்ள, பயப்படுவது ஏன்?

அவர் நிரபராதி என்று நிரூபணம் ஆனால், அவரது காலை கழுவி தண்ணீர் குடிக்கிறேன்.

சட்டசபை கூட்டத்தில் நாங்கள் எழுப்பிய, கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அவரை பார்த்தால் கறை படிந்த முதல்வராக தெரிகிறது. அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்ட கவர்னரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

விசாரணையை எதிர்கொள்வதற்கு வசதியாக, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். கவர்னர் பதவி, அரசின் ஒரு பகுதி. பதவி பிரமாணம் செய்து வைக்கும் கவர்னருக்கு, பதவியை பறிக்கும் உரிமையும் உண்டு.

கவர்னரின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்துவது கேவலமான செயல். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us