sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

/

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

13


ADDED : ஜூன் 13, 2024 01:24 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 01:24 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.

ஆந்திரா முதல்வராக நேற்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, தன் குடும்பத்தினருடன் இன்று (ஜூன் 13) திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோயில் பிரசாதங்களை வழங்கினர். நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: 2047ம் ஆண்டுக்குள் தெலுங்கு மக்கள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவார்கள். நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்.

சதி

அரசியல் சதிகளை சகித்துக்கொள்ள மாட்டோம். குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நல்லவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்வோம். கெட்டவர்களை தண்டிப்போம். மக்கள் அளித்த வெற்றியை நான் இதுவரை பார்த்ததில்லை. மாநிலத்தில் மக்கள் ஆட்சி துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் செழிக்க பிரார்த்தனை செய்தேன். மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். இன்று முதல் நல்லாட்சி ஆரம்பமாகிறது. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us