sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரேவண்ணாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 

/

ரேவண்ணாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 

ரேவண்ணாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 

ரேவண்ணாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 


ADDED : ஆக 30, 2024 09:56 PM

Google News

ADDED : ஆக 30, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணாவிடம் விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவர் தனது வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது.

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார். நான்கு நாட்களுக்கு முன், ரேவண்ணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று, மனு மீது விசாரணை நடந்தது. ரேவண்ணா தரப்பு வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''என் மனுதாரர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்ததாக கூறப்படுவது, நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய புகார்.

''அதற்கு தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பழைய புகாருக்கு, இப்போது போடப்பட்டு உள்ள பிரிவுகள் பொருந்தாது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

அரசு வக்கீல் ரவிவர்வகுமார் வாதாடுகையில், ''வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வழக்கை ரத்து செய்யும்படி கேட்பது சரியல்ல,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, வழக்கு தொடர்பாக, ரேவண்ணாவிடம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தார்.






      Dinamalar
      Follow us