sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இட்லி சாப்பிடும் போட்டி தொண்டையில் சிக்கி பலி

/

இட்லி சாப்பிடும் போட்டி தொண்டையில் சிக்கி பலி

இட்லி சாப்பிடும் போட்டி தொண்டையில் சிக்கி பலி

இட்லி சாப்பிடும் போட்டி தொண்டையில் சிக்கி பலி


ADDED : செப் 14, 2024 10:51 PM

Google News

ADDED : செப் 14, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆடல், பாடல், விளையாட்டு, விருந்து என, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு ஆலாமரம் கொல்லப்புரை பகுதி மக்கள் பல்வேறு போட்டிகள் நடத்தினர்.

மாலை 3:30 மணியளவில் உணவு போட்டி நடந்தது. இதில், பங்கேற்றவர்கள் போட்டி போட்டு இட்லி சாப்பிட்டனர்.

அப்போது தொண்டையில் இட்லி சிக்கி அப்பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், 50, மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை வாளையார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாளையார் போலீசார் விசாரிக்கின்றனர். தொண்டையில் இட்லி சிக்கி, மூச்சுக்குழாயிலும் அடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம்.

பிரேத பரிசோதனைக்கு பிறகே, இறப்புக்கான முழு காரணம் தெரியும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us