sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பிரஜ்வல் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும்'

/

'பிரஜ்வல் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும்'

'பிரஜ்வல் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும்'

'பிரஜ்வல் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும்'


ADDED : மே 19, 2024 12:36 AM

Google News

ADDED : மே 19, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: “பிரஜ்வல் தவறு செய்திருந்தால், சட்டப்படி தண்டனை வழங்கட்டும். இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை,” என, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன். இவர் சமீபத்தில் பாலியல் வழக்கில் சிக்கினார். இது குறித்து தேவகவுடா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர், வீட்டை விட்டு வெளியில் வரவும் இல்லை. கட்சியினர் அவரது வீட்டுக்கே சென்று பார்த்து வந்தனர்.

இந்நிலையில், தேவகவுடாவுக்கு நேற்று 92வது பிறந்த நாள். கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த பின், முதன்முறையாக தன் பேரன் பிரஜ்வல் குறித்து தேவகவுடா அளித்த பேட்டி:

பிரஜ்வல் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனை வழங்கட்டும். இதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதற்கு அரசு தகுந்தநடவடிக்கை எடுக்கட்டும்.

பிரஜ்வல் வெளிநாடு சென்றுள்ளார். அது தொடர்பாக குமாரசாமியும் விளக்கம் அளித்துள்ளார். குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்; அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us