sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பா.ஜ., அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பா.ஜ., அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பா.ஜ., அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : செப் 10, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 11:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : கர்நாடக பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலால், அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில், நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாநில பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், ராமேஸ்வரம் கபேவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பா.ஜ., அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அலுவலக நுழைவு வாயிலில், ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், யாரும் அதன் வழியாக வருதில்லை.

தற்போது யாராக இருந்தாலும், இந்த மெட்டல் டிடெக்டர் கருவி வழியாக தான் உள்ளே நுழைய வேண்டும். அத்துடன் நான்கைந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். மல்லேஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தினமும் பா.ஜ., அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us