ADDED : செப் 06, 2024 05:57 AM
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் போட்டியின்போது அவர், அவுட் ஆகிவிட்டால், இனி இந்தியா தோற்றுவிடும் என்று, ரசிகர்கள் 'டிவி'யை அணைத்துவிட்டுச் சென்ற நாட்கள் உண்டு. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை.
அணியில் ஒரு முக்கிய பேட்ஸ்மேன் அவுட் ஆனால், இன்னொரு பேட்ஸ்மேன் அணியை கரை சேர்ப்பார் என்ற நிலை உருவாகி உள்ளது.
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சாதித்தவர்கள் ஏராளம். நம் கிரிக்கெட் அணியில் முன்பு ஒருவருக்கு வாய்ப்பு பல முறை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எளிதில் ஓரங்கட்டப்படுகின்றனர்.
அதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள கிரிக்கெட்டர்கள் சாதித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
துவண்டு கிடப்பவர்களுக்கு பால் வேற்றுமையெல்லாம் கிடையாது. வாய்ப்பு மறுக்கப்பட்டு, மீண்டும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும் சாதித்த இரு உள்ளங்கள் இங்கே...