sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்ததாக நாடகம் பிச்சைக்காரரை கொன்றது அம்பலம்

/

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்ததாக நாடகம் பிச்சைக்காரரை கொன்றது அம்பலம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்ததாக நாடகம் பிச்சைக்காரரை கொன்றது அம்பலம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்ததாக நாடகம் பிச்சைக்காரரை கொன்றது அம்பலம்

3


ADDED : ஆக 25, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 25, 2024 12:45 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன், : கர்நாடகாவில் இன்சூரன்ஸ் பணத்துக்காக, அப்பாவி பிச்சைக்காரரை கொலை செய்து விபத்து என நாடகமாடிய தம்பதி, தற்போது சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தின், அரசிகெரே தாலுகாவில், கொல்லரஹொசஹள்ளி கேட் அருகில், கடந்த 12ம் தேதி, கார் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதிர்ச்சி


அங்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அது ஹொஸ்கோட்டில் வசிக்கும் முனிசாமி கவுடா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிந்தது. முனிசாமியின் மனைவி ஷில்பா ராணி என்பவர், மறுநாள் மருத்துவமனைக்கு வந்து விபத்தில் இறந்தது தன் கணவர்தான் என அடையாளம் காண்பித்தார்.

இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், முனிசாமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. அதன்பின் விசாரணையை தீவிரப் படுத்திய நிலையில், போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட்டின், சிக்ககோலிகா கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி கவுடா, 48. ஹொஸ்கோட்டில் டயர் கடை நடத்துகிறார். இவர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

தொழிலுக்காக பல இடங்களில் கடன் வாங்கினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பண பிரச்னை ஏற்பட்டது. கடன்காரர்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கினர்.

இன்சூரன்ஸ் பணத்தை எடுத்து கடனை அடைக்க தன் மனைவி ஷில்பா ராணியுடன், 44, இணைந்து, 'மாஸ்டர் பிளான்' போட்டார்.

முனிசாமி கவுடா முகச்சாயல் கொண்ட ஒருவரை தேடினர். ஹொஸ்பேட்டில் பிச்சைக்காரர் ஒருவரை கண்டு பிடித்தனர். ஏற்கனவே போட்டு வைத்த திட்டப்படி, ஆகஸ்ட் 12ல் அந்த பிச்சைக்காரருக்கு உதவி செய்வதாக கூறிய முனிசாமி கவுடா, தன் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவில் கொல்லரஹொசஹள்ளி கேட் அருகில், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கார் டயர் பஞ்சர் ஆனதை போன்று நடித்து, காரை நிறுத்தினார். டயரை மாற்றும்படி பிச்சைக்காரரிடம் கூறினார். அவரும் டயரை மாற்றிக் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து, முனிசாமி கவுடா கொலை செய்துஉள்ளார்.

குழப்பம்


ஏற்கனவே திட்டமிட்டபடி, லாரியை வரவழைத்து விபத்து போன்று செட்டப் செய்து, தானே இறந்ததாக தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பினார். மனைவிக்கு தகவல் கொடுத்தார். மனைவி ஷில்பாராணியும், விபத்தில் இறந்தது தன் கணவரே என, நாடகமாடி கண்ணீர் விட்டார்.

கழுத்தில் இருந்த காய அடையாளங்கள், பிரேத பரிசோதனை அறிக்கையும் கொலையை காட்டிக் கொடுத்துவிட்டன. தலைமறைவாக இருந்த முனிசாமி கவுடாவுக்கு, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

தன் உறவினரான சிட்லகட்டா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சீனிவாசை சந்தித்து, 'நான் ஹாசனுக்கு காரில் செல்லும்போது, ஒரு நபர் மீது மோதிவிட்டேன். அவர் இறந்துவிட்டார். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்' என கேட்டுள்ளார்.

இவரது பேச்சும், செயலும் சந்தேகத்தை அளித்ததால், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ், முனிசாமி கவுடாவை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விபத்தில் இறந்தது தன் கணவர்தான் என நாடகமாடிய ஷில்பா அதன்பின் முனிசாமி கவுடாவை, கண் முன்னே நிறுத்தியபோது, இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவருடன் சேர்ந்து நடத்திய நாடகத்தை ஒப்புக்கொண்டார்.

தம்பதியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us