'ஜெய் ஹிந்த்' இருக்க 'குட்மார்னிங்' எதற்கு; கேட்கிறது ஹரியானா அரசு!
'ஜெய் ஹிந்த்' இருக்க 'குட்மார்னிங்' எதற்கு; கேட்கிறது ஹரியானா அரசு!
ADDED : ஆக 09, 2024 12:23 PM

சண்டிகர்: ஹரியானா மாநில பள்ளிகளில் மாணவர்கள் 'குட்மார்னிங்'கிற்கு பதில் 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல வேண்டும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், '' தேச பற்று, நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், பள்ளிகளில் காலையில் 'குட்மார்னிங்'கிற்கு பதில் 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போதும், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை தூண்டும்.
'ஜெய் ஹிந்த்'
தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதில், மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல துவங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.