sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம் கல்வி கொள்கை குறித்து ஜெய்சங்கர் பேச்சு

/

சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம் கல்வி கொள்கை குறித்து ஜெய்சங்கர் பேச்சு

சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம் கல்வி கொள்கை குறித்து ஜெய்சங்கர் பேச்சு

சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம் கல்வி கொள்கை குறித்து ஜெய்சங்கர் பேச்சு


ADDED : பிப் 23, 2025 11:52 PM

Google News

ADDED : பிப் 23, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரணாசி: “இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள வரலாற்று தொடர்புகளை விளக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நேற்று நடந்த காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சிக்கு சோமாலியா, ருவாண்டா ஜமைக்கா உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட நாடுகளின் துாதர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்து வந்தார். அவர்கள், காசி தமிழ் சங்கமம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியாவிற்கும், உலகிற்கும் இடையிலான உறவில், வரலாற்று ரீதியாக நாம் முந்தைய காலங்களில் உலகிற்கு தொழில்நுட்பத்தின் ஆதாரமாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அதை, நாம் இன்று மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் வழியே இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம்.

நம் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். புதிய கல்வி கொள்கை வாயிலாக பல புதிய தொழில் துறைகளை நாம் கொண்டு வந்துள்ளோம்.

உதாரணமாக விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சொல்லலாம். பிரதமர் கூட தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் என்று தான் கூறுகிறார். எனவே, பாரம்பரியம் தொழில்நுட்பத்திற்கும் உதவும், அங்குதான் நம் இந்திய அறிவு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்படித்தான் யோகா கலையை உடற்பயிற்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர். பாரம்பரிய மருத்துவமும் அப்படித்தான். அதன் மீது, இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே, பாரம்பரிய மருத்துவத்தின் அவசியத்தை புரிந்துகொண்டு அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வது, நம் கைகளில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us