sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜனக்புரி விபத்து ஜல் போர்டு ச-ப் - கான்ட்ராக்டர் கைது; அதிகாரிகள் சஸ்பெண்ட்

/

ஜனக்புரி விபத்து ஜல் போர்டு ச-ப் - கான்ட்ராக்டர் கைது; அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஜனக்புரி விபத்து ஜல் போர்டு ச-ப் - கான்ட்ராக்டர் கைது; அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஜனக்புரி விபத்து ஜல் போர்டு ச-ப் - கான்ட்ராக்டர் கைது; அதிகாரிகள் சஸ்பெண்ட்


ADDED : பிப் 08, 2026 12:41 AM

Google News

ADDED : பிப் 08, 2026 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜனக்புரியில் ஜல் போர்டு தோண்டிய, 15 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், சப்-கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லி கைலாஷ்புரியை சேர்ந்தவர் கமல் பயானி, 25. ரோஹிணியில் உள்ள தனியார் வங்கி கால் சென்டர் ஊழியர். கடந்த, 5ம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ஜனக்புரியில் பேராசிரியர் ஜோகிந்தர் மார்க்கில் ஜல் போர்டு தோண்டி வைத்திருந்த, 15 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்து உயிரிழந்தார். குடும்பத்தினர் இரவு முழுதும் தேடிய நிலையில், மறுநாள் காலை 8:00 மணிக்கு கமல் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜனக்புரி போலீசார், ஜல் போர்டு பணிகளை செய்து வரும் சப்-கான்ட்ராக்டர் ராஜேஷ் குமார் பிரஜாபதி,47,ஐ நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து, மேற்கு மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் தாரடே சரத் பாஸ்கர் கூறியதாவது:

கமல் விழுந்த கிடந்த பள்ளம் அருகே நள்ளிரவில் சென்ற ஒரு குடும்பத்தினர், பள்ளத்தில் பைக்குடன் ஒருவர் கிடப்பது குறித்து அந்த இடத்தில் பணியில் இருந்த பாதுகாவலருக்கும், அருகில் கூடாரத்தில் வசித்த ஒருவரிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். கான்ட்ராக்டர் பிரஜாபதியால் பணியமர்த்தப்பட்ட அந்தப் பாதுகாவலர், உடனடியாக இளநிலை ஊழியருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த இளநிலை ஊழியர், அதிகாலை 12:22 மணிக்கு பிரஜாபதியை மொபைல் போனில் அழைத்து சம்பவ இடத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் வந்த பிரஜாபதி, பள்ளத்துக்குள் பைக்குடன் ஒரு வாலிபர் கிடப்பதை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். போலீசுக்கோ தீயணைப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்கவில்லை.

கடந்த, 5ம் தேதி நண்பகலில் 15 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலைக்கு நடுவில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தபோதிலும், தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ அல்லது பாதுகாப்பு காவலரோ இல்லை. பள்ளம் தோண்டிய பின் ஆய்வு செய்த ஜல் போர்டு அதிகாரிகளும் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய தவறி விட்டனர். கான்ட்ராக்டர், சப்-கான்ட்ராக்டர் மற்றும் டில்லி ஜல் போர்டு அதிகாரிகள் மீது கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் ஆய்வு சம்பவ இடத்தில் நேற்று மீண்டு ஆய்வு செய்த டில்லி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த விவகாரம் விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா வழிகாட்டுதல்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுறுத்தல்படி, பணியில் அலட்சியமாக இருந்த டில்லி ஜல் போர்டு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடிவில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவம் மிகுந்த வலியும் துக்கமும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞனை திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனால், முதல்வர் ரேகா குப்தா இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறார்.

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் என்ற முறையில், மாநகராட்சி மற்றும் பிற துறைகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். இந்தச் சம்பவத்துக்குப் பின், எந்தக் குறைபாடுகளும் அல்லது அலட்சியமும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இழப்பீடு ரூ. 10 லட்சம்?

ஜனக்புரி விபத்தை தொடர்ந்து, டில்லி ஜல் போர்டு சார்பில் கட்டுமானப் பணிகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, டில்லி ஜல் போர்டு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைத்து கட்டுமான தளங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கான்ட்ராக்டரை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர். ஜனக்புரி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த கமல் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஜல் போர்டு விரைவில் வழங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.



போலீசும் மெத்தனம்

ஜனக்புரியில் ஜல் போர்டு பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த கமல் தியானியின் குடும்பம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர், ஆஸ்தா சதுர்வேதி கூறியதாவது: கட்டுமானப் பணிகளுக்காக சாலை நடுவில் ஜல் போர்டு, 20 அடி ஆழ பள்ளத்தை தோண்டியுள்ளது. ஆனால், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் எதுவும் வைக்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரிப்பதில் போலீஸ் மெத்தம் காட்டுகிறது. டில்லி ஜல் போர்டு அதிகாரிகளின் முழுமையான அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், ஜனக்புரி பகுதி முழுதுமே சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இந்த விபத்தில் கான் ட்ராக்டர் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து உறுதியான தகவல் எதுவும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு நடுநிலையுடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட வாலிபர் குடும்பத்துக்கு விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். ஒரு வாலிபர் உயிரிழந்த பிறகுதான், அனைத்து பள்ளங்களையும் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இப்போது வைத்துள்ள தடுப்புகள் அனைத்தும் கமல் பலியான பிறகு வைக்கப்பட்டவை. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us