sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜனதாதளம் தொண்டர்கள் கொலை வழக்கு; மா.கம்யூ., தலைவர் உட்பட 6 பேர் விடுதலை

/

ஜனதாதளம் தொண்டர்கள் கொலை வழக்கு; மா.கம்யூ., தலைவர் உட்பட 6 பேர் விடுதலை

ஜனதாதளம் தொண்டர்கள் கொலை வழக்கு; மா.கம்யூ., தலைவர் உட்பட 6 பேர் விடுதலை

ஜனதாதளம் தொண்டர்கள் கொலை வழக்கு; மா.கம்யூ., தலைவர் உட்பட 6 பேர் விடுதலை


ADDED : ஆக 21, 2024 11:36 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : ஜனதாதளம் தொண்டர்களை ஜீப் மோத விட்டு கொலை செய்த வழக்கில், மா.கம்யூ., கட்சி தலைவர் உட்பட, 6 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வண்டிதாவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவதாஸ், கருப்பசாமி. இவர்கள் ஜனதாதளம் கட்சி தொண்டர்கள்.

கடந்த, 2002ல் இவர்கள் பைக்கில், சித்தூர் நிலம்பதி பாலம் அருகே சென்ற போது, பின் தொடர்ந்து வந்த ஜீப் மோதியது. இதில் இருவரும் பலியாயினர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சித்தூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அரசியல் விரோதம் காரணமாக மா.கம்யூ., கட்சியினர் ஜீப் மோத விட்டு இருவரையும் கொலை செய்ததும், இதன் பின்னணியில் தற்போதைய மா.கம்யூ. கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, தொண்டர்களான அனில், கிருஷ்ணன் குட்டி, சண்முகன், பார்த்தன், கோகுல்தாஸ் ஆகியோர் இருப்பதும், என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த இந்த வழக்கு விசாரணை, பாலக்காடு விரைவு நீதிமன்றம் --2ல் நடந்தது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் செய்ததற்கான போதிய ஆவணங்கள், அரசு தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறிய நீதிபதி ஜெய்வந்த், குற்றம் சாற்றப்பட்ட, 6 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us