sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்

/

என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்

என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்

என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்

19


ADDED : ஆக 18, 2024 06:37 AM

Google News

ADDED : ஆக 18, 2024 06:37 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டத்தை ரத்து செய்த முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.ஓமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து

இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது: தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்.

நாங்கள் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் வந்தாச்சு!

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us