sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எத்னாலுக்கு கல்தா: எம்.ஆர்.பாட்டீல் தகவல்

/

எத்னாலுக்கு கல்தா: எம்.ஆர்.பாட்டீல் தகவல்

எத்னாலுக்கு கல்தா: எம்.ஆர்.பாட்டீல் தகவல்

எத்னாலுக்கு கல்தா: எம்.ஆர்.பாட்டீல் தகவல்


ADDED : மே 03, 2024 06:50 AM

Google News

ADDED : மே 03, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: ''பா.ஜ.,வில் இருந்து எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வெளியேற்றப்படலாம்,'' என்று, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

பா.ஜ., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாட்டீல், விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:

கர்நாடகாவின் வடமாவட்டங்களில் பா.ஜ.,வை கட்டி எழுப்ப உழைத்த தலைவர்களில், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும் ஒருவர். ஆனால் அவருக்கு கட்சியில், உரிய மரியாதை கிடைப்பது இல்லை.

எடியூரப்பா ராஜினாமா செய்த பின்பு, முதல்வர் பதவிக்கு பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் பெல்லத் பெயர்கள் முன்னிலையில் இருந்தன.

ஆனால், இருவருக்கும் முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவியும் தராமல் இருவரையும் ஏமாற்றினர். விஜயபுரா அரசியலில் எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி செல்வாக்கு செலுத்த நினைக்கிறார். இதனால் எத்னாலுக்கு பதவி கிடைக்க விடாமல், கூட்டு சதி செய்கிறார்.

கட்சிக்காக உழைத்த ஈஸ்வரப்பாபை நீக்கி உள்ளனர். எதிர்காலத்தில் எத்னாலும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படலாம்.

எம்.பி., ரமேஷ் ஜிகஜினகிக்கு, பஞ்சமசாலி சமூகம் மீது எந்த அக்கறையும் இல்லை. அவரை எதற்காக நாங்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us