சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் டில்லி ஐகோர்ட்டில் மனு
சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் டில்லி ஐகோர்ட்டில் மனு
ADDED : ஜூலை 01, 2024 04:38 PM

புதுடில்லி: சி.பி.ஐ.,யால் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில், இந்த வழக்கினை விசாரித்து வரும் மற்றொரு அமைப்பான சி.பி.ஐ., கெஜ்ரிவாலை திகார் சிறையிலேயே வைத்து கைது செய்தது. தற்போது, கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.,யால் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (ஜூலை 2) விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.