ADDED : மே 10, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று, தெற்கு டில்லியில் தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து நேற்று மாலை, அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இரவு 8.20 மணிக்கு சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இன்று, தெற்கு டில்லியில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் பேசுகிறார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
தெற்கு டில்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஹிராம் பெஹல்வன் போட்டியிடுகிறார்.