sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

/

திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்


ADDED : ஏப் 22, 2024 11:50 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'தினமும் இன்சுலின் கேட்டு வருகிறேன். என் நீரிழிவு நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என, எய்ம்ஸ் டாக்டர்கள் கூறவே இல்லை' என, திஹார் சிறை நிர்வாகத்துக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

டில்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான இவர், சர்க்கரை அளவு அதிகரித்து வருவதாகவும், இன்சுலின் தேவைப்படுவதாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஏற்பாட்டை, திஹார் சிறை நிர்வாகம் செய்தது.

இந்த ஆலோசனையின் போது, நீரிழிவு பிரச்னையை அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பவில்லை என்றும், அவரது நீரிழிவு நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என, எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவித்ததாகவும் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இதை திட்டவட்டமாக மறுத்து, திஹார் சிறை நிர்வாகத்துக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். இக்கடிதத்தை, டில்லி அமைச்சர் ஆதிஷி நேற்று வெளியிட்டார்.

அதன் விபரம்:

எய்ம்ஸ் டாக்டர்களுடனான ஆலோசனையின் போது, இன்சுலின் விவகாரத்தை நான் எழுப்பவில்லை என, திஹார் சிறை நிர்வாகம் கூறியது, அபத்தமானது. இந்த விவகாரத்தை நான் தினமும் எழுப்பி வருகிறேன்.

என்னை சந்திக்க வரும் டாக்டர்களிடம் என் சர்க்கரை அளவு குறித்து தெரியப்படுத்தி வருகிறேன். என் நீரிழிவு நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என, எய்ம்ஸ் டாக்டர்கள் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

அப்படியிருக்கையில், அவர்கள் தெரிவிக்காத கருத்தை திஹார் சிறை நிர்வாகம் கூறியது ஏன்? அரசியல் அழுத்தத்தின் கீழ், திஹார் சிறை நிர்வாகம் தவறான அறிக்கையை வெளியிட்டது வேதனைக்குரியது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எய்ம்சுக்கு கோர்ட் உத்தரவு

டாக்டரிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த அனுமதி கோரி, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் தேவையா என்பதைத் தீர்மானிக்க மருத்துவக் குழுவை அமைக்கும்படி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். மேலும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசிக்க அனுமதி அளிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.



ரூ.75,000 அபராதம்!

பண மோசடி வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், நான்காம் ஆண்டு சட்டக் கல்லுாரி மாணவர் ஒருவர் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் ப்ரீதம் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரரான மாணவருக்கு, 75,000 ரூபாய் அபராதம் விதித்தது.அப்போது அமர்வு கூறியதாவது:ஒருவர், உயர் பதவி வகிக்கிறார் என்பதற்காக, அவருக்காக சட்ட நடவடிக்கைகளில் எந்த சலுகையும் காட்ட முடியாது. சட்டத்தை விட யாரும் மேலானவர்கள் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம். கெஜ்ரிவால் விஷயத்தில் சட்டப்படி எல்லாம் நடக்கிறது. தனக்கு நிவாரணம் கேட்டு, அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் நடக்கின்றன. இதில், அவருக்கு ஜாமின் அளிக்கும்படி கேட்பதற்கு, நீங்கள் யார்? உங்களுக்கு சிறப்பு அதிகாரம் உள்ளதாக கருதுகிறீர்களா? இவ்வாறு அமர்வு கூறியது.








      Dinamalar
      Follow us