டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
UPDATED : ஜூன் 23, 2024 07:39 PM
ADDED : ஜூன் 23, 2024 06:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தன்னுடைய ஜாமின் மனுவை ரத்து செய்த டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை (24.06.2024) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்,
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த 20-ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த வழக்கில், டில்லி ஐகோர்ட் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் நாளை( 24.06.2024) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.