sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

/

2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

10


UPDATED : செப் 15, 2024 12:55 PM

ADDED : செப் 15, 2024 12:32 PM

Google News

UPDATED : செப் 15, 2024 12:55 PM ADDED : செப் 15, 2024 12:32 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''அடுத்த 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன்,'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவால் இப்போது தான் ஜாமினில் விடுதலையாகி உள்ளார். கைது செய்யப்பட்டபோதும், சிறையில் இருந்தபோதும், பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கெஜ்ரிவால், இப்போது ஜாமினில் விடுதலையாக உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

கடவுளுக்கு நன்றி!

டில்லியில் இன்று(செப்.,15) கட்சி தொண்டர்கள் மத்தியில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: கஷ்ட காலங்களில் எங்களுடன் இருந்த கடவுளுக்கு மிக்க நன்றி. பெரிய எதிரிகளுடன் போரிட்டுள்ளோம். நமது கட்சி தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், அமானதுல்லா கான் இன்னும் சிறையில் உள்ளார்கள். அவர்கள் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என நம்புகிறேன். இன்னும் 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளேன். 2 நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்தல் சந்திக்க தயார்

முதல்வர் பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நவம்பரில் மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் டில்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளேன். நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். நான் நேர்மையானவன் என என கருதினால் மக்கள் எனக்கு ஓட்டளிக்கட்டும். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு தான், முதல்வர் நாற்காலியில் அமர்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுக்கு மகிழ்ச்சி

ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பேசியதாவது: மதுபான ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., பொய் வழக்கு பதிந்துள்ளது. ஆனால் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி அதற்கு முடிவு வழங்கி உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான முடிவு. டில்லி சட்டசபை தேர்தல் வரை அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us