sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்கீலை சந்திக்க கூடுதல் நேரம் கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு

/

வக்கீலை சந்திக்க கூடுதல் நேரம் கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு

வக்கீலை சந்திக்க கூடுதல் நேரம் கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு

வக்கீலை சந்திக்க கூடுதல் நேரம் கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு


ADDED : ஏப் 10, 2024 09:29 PM

Google News

ADDED : ஏப் 10, 2024 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வழக்கறிஞர்களைச் சந்திக்க கூடுதல் நேரம் அளிக்கக் கோரிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுவை டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது

டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், சிறையில் தன் வழக்கறிஞர்களைச் சந்திக்க கூடுதல் நேரம் அளிக்க உத்தரவிடக் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிறைக்குள் இருந்து அரசை நடத்த வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது. இது சிறை விதிமுறைகளுக்கு எதிரானது. சட்டப்பூர்வ சந்திப்புகளை கெஜ்ரிவால் தவறாக பயன்படுத்துகிறார்' என வாதிட்டார்.

கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒரு நபர் புரிந்து கொள்ளவும், அறிவுரைகளை வழங்கவும் வாரத்துக்கு ஒரு மணி நேரம் போதாது.

'வழக்கறிஞரை சந்திக்க நேரம் கேட்பது மிக அடிப்படையான சட்ட உரிமை. ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் மீது எட்டு வழக்குகள் இருந்தபோதும் அவருக்கு வாரத்துக்கு மூன்று முறை தலா ஒரு மணி நேரம் வழக்கறிஞரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

'பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகளை எதிர்கொள்வதால், கெஜ்ரிவால் தன் வழக்கறிஞர்களுடன் வாரத்துக்கு ஐந்து முறை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சிறை கையேடு படிக்கிறார்!

திஹார் சிறை அதிகாரி கூறியதாவது:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திஹார் சிறைக்கு கடந்த 1ம் தேதி வந்தார். அவருக்கு சிறை எண் 2ல் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் 'பிரதமர்கள் எப்படி முடிவு செய்கின்றனர்' ஆகிய மூன்று புத்தகங்களைக் கேட்டிருந்தார். சிறை நுாலகத்தில் இருந்து மூன்று புத்தகங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சிறை எண் 1ல் சிசோடியாவும், 7ல் சத்யேந்தர் ஜெயினும் அடைக்கப்பட்டுஉள்ளனர். ஆம் ஆத்மியின் மூன்று தலைவர்களுக்குமே சிறை விதிமுறைப்படி கொசு வலை வழங்கப்பட்டுள்ளது.கெஜ்ரிவால் தன் அறையில் அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படிக்கிறார். அதேபோல, 20 சேனல்கள் கொண்ட 'டிவி' அவர் அறையில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் உபயோகிப்பதில்லை. அவர் கேட்டதால் சிறை கையேடு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை மிகவும் கவனமாகப் படித்து வருகிறார்.புத்தகம் படிப்பதை தவிர தியானம் மற்றும் யோகா ஆகியவற்றிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்.அந்த அறையில் இரண்டு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அவர் கண்காணிக்கப்படுகிறார். அறைக்கு வெளியே ஒரு சிறிய லாபி உள்ளது. அவ்வப்போது அங்கு உலாவுகிறார்.



சிறையில் விதிமுறை மீறல்!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் நேற்று கூறியதாவது:திஹார் சிறையில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்க்குமாறு தன் வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் வாயிலாக தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனுமதி மறுக்கப்படும் என கெஜ்ரிவாலை அச்சுறுத்தினர்.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும், நானும் கெஜ்ரிவாலை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், அதற்கான டோக்கன் எண் வழங்கப்பட்டிருந்தும் சிறை அதிகாரிகள் சந்திப்பை ரத்து செய்துள்ளனர். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை தனிமைப்படுத்தி சீர்குலைக்க சிலர் திட்டமிட்டுள்ளனர். எந்த சித்ரவதைக்கும் கெஜ்ரிவால் உடைய மாட்டார். தலைவணங்கவும் மாட்டார். மத்திய அரசின் இந்த அராஜக செயலுக்கு டில்லியின் 2 கோடி மக்களும் லோக்சபா தேர்தலில் பதில் அளிப்பர். கெஜ்ரிவால் தன் வழக்கறிஞரைச் சந்திக்கும் போது, அவரைச் சுற்றி போலீஸார் கூட்டமாக நிற்கின்றனர். சிறையில் கைதிகளை தங்கள் வழக்கறிஞருடன் தனிப்பட்ட முறையில் பேச விதிமுறைப்படி அனுமதிக்க வேண்டும். ஆனால், திஹாரில் விதிமுறை மீறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



மான் - கெஜ்ரிவால் விரைவில் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திஹார் சிறை அதிகாரிக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தார்.இதையடுத்து, திஹார் சிறை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், பஞ்சாப் மாநில கூடுதல் டி.ஜி.பி., டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரிகள் மற்றும் திஹார் சிறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இந்தக் கூட்டத்தில் இரு முதல்வர்களும் சந்திக்கும் தேதி, நேரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us