sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தம்பி, பாட்டி உட்பட 5 பேரை அடித்து கொன்ற கேரள இளைஞர்

/

தம்பி, பாட்டி உட்பட 5 பேரை அடித்து கொன்ற கேரள இளைஞர்

தம்பி, பாட்டி உட்பட 5 பேரை அடித்து கொன்ற கேரள இளைஞர்

தம்பி, பாட்டி உட்பட 5 பேரை அடித்து கொன்ற கேரள இளைஞர்

3


ADDED : பிப் 25, 2025 01:19 AM

Google News

ADDED : பிப் 25, 2025 01:19 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில், 13 வயது தம்பி, பாட்டி, காதலி உட்பட ஐந்து பேரை, 23 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பெருமலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபான், 23. இவரது தந்தை ரஹீம், வெளிநாட்டில் வசிக்கிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இவர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு, பாங்கோடு பகுதியில் உள்ள பாட்டி சல்மா பீவியின் வீட்டுக்கு சென்ற அபான், சுத்தியலால் அவரை அடித்துக் கொன்றார். தொடர்ந்து, எஸ்.என்.புரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்ற அபான், மாமா லத்தீப், அத்தை ஷாஹிதா ஆகியோரை அடித்துக் கொன்றார்.

பெருமலாவில் உள்ள தன் வீட்டுக்கு வந்த அபான், ஒன்பதாம் வகுப்பு படித்த தம்பி அப்சான், 13, காதலி பர்சானா ஆகியோரை சுத்தியலால் அடித்துக் கொன்றார். அவர் தாக்கியதில், தாய் ஷெமி படுகாயம் அடைந்தார்.

இரண்டு மணி நேரத்தில் ஐந்து பேரை கொன்ற அபான், வெஞ்சாரமூடு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அப்போது, தம்பி, பாட்டி, காதலி உட்பட ஐந்து பேரை கொன்றதாக அவர் கூறினார். மேலும், எலி மருந்து குடித்ததாகவும் அபான் கூறினார். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

அபான் தகவலின்படி சம்பவ இடங்களுக்கு சென்ற போலீசார், ஐந்து பேரின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிய தாய் ஷெமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அபானிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தந்தையின் கடன்களை தீர்ப்பது தொடர்பாக குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உறவினர்கள் உதவ மறுத்ததாகவும், இதனால், பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட ஐந்து பேரை அபான் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us