sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒக்கலிகர் முதல்வர் ஆவார் கிருஷ்ணபைரே கவுடா கணிப்பு 

/

ஒக்கலிகர் முதல்வர் ஆவார் கிருஷ்ணபைரே கவுடா கணிப்பு 

ஒக்கலிகர் முதல்வர் ஆவார் கிருஷ்ணபைரே கவுடா கணிப்பு 

ஒக்கலிகர் முதல்வர் ஆவார் கிருஷ்ணபைரே கவுடா கணிப்பு 


ADDED : ஏப் 25, 2024 04:31 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாப்பூர் : “வருங்காலத்தில் ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவார்,” என, அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில், சித்தராமையா முதல்வராக உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு பின்னர், முதல்வர் மாற்றம் நடக்கலாம். துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் ஆகலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்த சிவகுமாரும், தேர்தல் பிரசாரத்தில் ஒக்கலிகர்கள், தனது கையை பலப்படுத்த வேண்டும் என, பேசி வருகிறார்.

இந்நிலையில், வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, சிக்கபல்லாப்பூரில் நேற்று அளித்த பேட்டி:

பா.ஜ.,வில் ஒக்கலிகர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' மறுக்கப்பட்டது. ஆனால் காங்கிரசில் ரெட்டிகள் எட்டு ஒக்கலிகருக்கு, சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.

வரும் காலத்தில் ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆவார். இதனால் தேர்தலில் போட்டியிடும் ஒக்கலிக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ண பைரேகவுடாவும் ஒக்கலிகர் தான். சட்டசபை தேர்தலுக்கு முன்பு, அவரது பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us