sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு

/

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு


ADDED : ஆக 05, 2024 06:41 PM

Google News

ADDED : ஆக 05, 2024 06:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணக்யாபுரி:டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக, பா.ஜ.,வின் ரோகினி எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ராம்வீர் சிங் பிதுரி இருந்தார். லோக்சபா தேர்தலில் தெற்கு டில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதையடுத்து சட்டசபை புதிய எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய மாநில பா.ஜ., முடிவு செய்தது. நேற்று சாணக்யாபுரியில் உள்ள மாநில பா.ஜ., அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், ஏழு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், இணைப் பொறுப்பாளர் அல்கா குர்ஜார், தலைவர் வீரேந்திர சச்தேவா, பொதுச் செயலர் (அமைப்பு) பவன் ராணா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விஜேந்தர் குப்தாவின் பெயரை கட்சியின் தலைமைக் கொறடா அஜய் மஹாவர் முன்மொழிந்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கையில், ரோகினி தொகுதி எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா, புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2020 வரை எதிர்க்கட்சித் தலைவராக விஜேந்தர் குப்தா செயல்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சில மாதங்கள் மட்டும் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு விஜேந்தர் குப்தாவுக்கு கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us