ADDED : ஜூலை 14, 2024 03:38 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்-கெட்டுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், தென்காசி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, எலுமிச்சை பழங்கள் விற்-பனைக்கு வருகிறது. தினமும் சராசரியாக, 1 டன் பழம் வரத்-தாகும். தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையால், காய் பிடிப்பு அதிகரித்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு சில நாட்களாக தினமும், 3 டன் வரத்-தாகிறது. விலையும் படிப்படியாக சரிந்து ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கோடை தாக்கத்தால் எலு-மிச்சை தேவை அதிகரித்தது. ஒரு பழம் 6 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால், 30 ரூபாயாக கிலோ குறைந்து விட்டது. வரத்து தொடர்ந்து அதிக-ரிப்பதால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.

