sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துாறலை ரசிக்க ரெடியாகலாம்

/

துாறலை ரசிக்க ரெடியாகலாம்

துாறலை ரசிக்க ரெடியாகலாம்

துாறலை ரசிக்க ரெடியாகலாம்


ADDED : மே 09, 2024 02:29 AM

Google News

ADDED : மே 09, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று வெப்பநிலை, 38.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட சற்று குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் ஈரப்பதம் 46 சதவீதம் முதல் 62 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.

நேற்று முன் தினம் டில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச நிலை. ஆனால், நேற்று நான்கு டிகிரிகள் குறைந்துள்ளது.

டில்லி வானிலை ஆய்வு மைய இயக்குனர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா, “கடந்த ஆண்டைப் போலவே வெப்பநிலை நீடிக்கும். வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லேசான தூறலுக்கு வாய்ப்பு உள்ளது. இன்று பலத்த காற்றை எதிர்பார்க்கலாம். இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியஸ் பதிவாகலாம்,”என்றார்.

காற்றின் தரக் குறியீடு 225 ஆக இருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியம் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us