sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிரைவர் கொலையில் 4 பேருக்கு 'ஆயுள்'

/

டிரைவர் கொலையில் 4 பேருக்கு 'ஆயுள்'

டிரைவர் கொலையில் 4 பேருக்கு 'ஆயுள்'

டிரைவர் கொலையில் 4 பேருக்கு 'ஆயுள்'


ADDED : மே 02, 2024 06:26 AM

Google News

ADDED : மே 02, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தட்சிண கன்னடா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

தட்சிண கன்னடாவின் பண்ட்வால் மஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜித்குமார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி விஜித்குமார், அவரது நண்பர் அபிஜித்தை முஸ்லிம் வாலிபர்கள் சிலர் தாக்கினர்.

இதனால் கோபத்தில் இருந்த விஜித்குமார், அபிஜித் ஆகிய இருவரும் தனது நண்பர்களான கிரண், அனிசுடன் சேர்ந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, யாராவது ஒருவரை தாக்க திட்டமிட்டு இருந்தனர்.

கடந்த 2015 ஆகஸ்ட் 6ல், ஆட்டோ டிரைவரான முகமது நசீர் என்பவரை, நான்கு பேரும் சேர்ந்து, ஆயுதங்களால் தாக்கினர். இதில், அவர் உயிரிழந்தார். பண்ட்வால் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது தட்சிண கன்னடா முதலாவது மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை, கடந்த மாதம் நிறைவு பெற்றது.

நான்கு பேரும் குற்றவாளிகள் என, நீதிபதி மல்லிகார்ஜுன சாமி அறிவித்தார். நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.

நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கொலை செய்யப்பட்ட முகமது நசீர் மனைவி ரமலத்துக்கு வழங்க, நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us