ADDED : செப் 07, 2024 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இதமான சூழ்நிலை நிலவியதால் டில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பநிலை அதிகபட்சமாக 34.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
இன்று நாள் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை அதிகபட்சமாக 34, குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்ஷியஸ் பதிவாகலாம் எனக் கூறியுள்ளது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 70 ஆக இருந்தது. இது திருப்தியான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.