ADDED : ஏப் 18, 2024 04:43 AM
பெங்களூரு : 'தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, யஷ்வந்த்பூர், ஒயிட்பீல்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
l ரயில் எண் 06533: யஷ்வந்த்பூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், இன்று இரவு 10:45 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலை 4:55 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில் எண் 06534: சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 6:45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
l ரயில் எண் 06005: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்றும், ஏப்., 20ம் தேதியும் அதிகாலை 5:35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:00 மணிக்கு ஒயிட்பீல்டு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06006: ஒயிட்பீல்டு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், இன்றும், ஏப்., 20ம் தேதியும் ஒயிட்பீல்டில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

