sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிக்கதிருப்பதி கோவில் உண்டியலில் காதல் கடிதம்

/

சிக்கதிருப்பதி கோவில் உண்டியலில் காதல் கடிதம்

சிக்கதிருப்பதி கோவில் உண்டியலில் காதல் கடிதம்

சிக்கதிருப்பதி கோவில் உண்டியலில் காதல் கடிதம்


ADDED : ஆக 01, 2024 12:08 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : சிக்க திருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணும் போது, பெண் ஒருவர் எழுதிய காதல் கடிதமும் இருந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

கோலார் மாவட்டம், மாலுாரில் சிக்க திருப்பதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், திருமலை திருப்பதி கோவிலுக்கு இணையான பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படும். நேற்று முன்தினம் காலையில் பணம் எண்ணப்பட்டது. கனரா வங்கி ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள், அப்பகுதி தனியார் பள்ளி மாணவர்கள் பணம் எண்ணினர்.

உண்டியலில் 50 கிராம் தங்கம், 545 கிராம் வெள்ளி என மொத்தம் 64.46 லட்சம் ரூபாய் வசூலாகியிருந்தது.

இது தவிர, காதலி ஒருவர், அவரின் காதலனுக்கு எழுதிய கடிதமும் இருந்தது.

பெலகாவியை சேர்ந்த காஞ்சன மாலா எழுதிய கடிதத்தில், 'ஐ லவ் யூ டியர் கிருஷ்ணா. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் கண்ணை மூடினாலும், திறந்திருந்தாலும், உன்னை என்னால் பார்க்க முடியும். என்னை போல், உன்னை நேசிப்பவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை' என குறிப்பிடப்பட்டிருந்தது.

சிக்கதிருப்பதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உண்டியல் பணத்தை எண்ணிய அதிகாரிகள், ஊழியர்கள். இடம்: மாலுார், கோலார்.






      Dinamalar
      Follow us