sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா., வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு கணவர் தமிழகத்தை சேர்ந்தவரா?

/

மஹா., வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு கணவர் தமிழகத்தை சேர்ந்தவரா?

மஹா., வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு கணவர் தமிழகத்தை சேர்ந்தவரா?

மஹா., வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு கணவர் தமிழகத்தை சேர்ந்தவரா?


ADDED : ஜூலை 30, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை, மஹாராஷ்டிராவின் வனப்பகுதியில், 50 வயது பெண் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட் நகல், தமிழக முகவரியில் உள்ள ஆதார் அட்டை மீட்கப்பட்டன. அவரது கணவர், தமிழகத்தைச் சேர்ந்தவரா என விசாரணை நடத்தப்படுகிறது.

மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டம், சோனுர்லி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் பெண் ஒருவர் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உதவி கேட்டு கூச்சலிட்டபடி இருந்துள்ளார்.

மனநல பிரச்னை


கடந்த 27ம் தேதி அவ்வழியே ஆடு மேய்த்து சென்ற நபர், பெண்ணின் குரலை கேட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து அந்த பெண்ணை மீட்டனர். அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட் நகல், தமிழக முகவரியில் உள்ள ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் மீட்டனர்.

அந்த பெண்ணின் பெயர் லலிதா காயி, 50, என தெரியவந்துள்ளது. அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், சிந்துதுர்க் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், மேல் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கு சிகிச்சை அளிப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது கைப்பையில் மனநல பிரச்னைக்கான மருந்துகள் இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்தியாவில் இருப்பதாகவும், அவரது விசா காலாவதியாகிவிட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த பெண் வாக்குமூலம் அளிக்கும் நிலைமையில் இல்லை. மேலும், அவர் எத்தனை நாள் அங்கு கட்டப்பட்டு கிடந்தார் என்ற தகவலும் தெரியவில்லை.

போலீஸ் படைகள்


அவரது கணவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிகிறது. அந்த பெண்ணை, அவர் மரத்தில் கட்டிவைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த பெண்ணின் உறவினர்களை தேடி தமிழகம், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீஸ் படைகள் விரைந்துள்ளன.






      Dinamalar
      Follow us