sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பக்கத்து வீட்டு நபரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்தவர் கைது

/

பக்கத்து வீட்டு நபரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்தவர் கைது

பக்கத்து வீட்டு நபரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்தவர் கைது

பக்கத்து வீட்டு நபரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்தவர் கைது


ADDED : மார் 14, 2025 11:37 PM

Google News

ADDED : மார் 14, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண கன்னடா: பக்கத்து வீட்டு நபரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்தபோது, சாலை ஓரத்தில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது.

துாக்கி வீசப்பட்ட அப்பெண், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பேஜாயினில் உள்ள கிரோடியன் சாலையில் வசித்து வருபவர் முரளி பிரசாத்.

இவரது அடுத்த வீட்டில் வசித்தவர் சதீஷ் குமார், 69, ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர்களின் இரு குடும்பத்தினரும் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் முரளி பிரசாத், பணிக்கு தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இவர் வருகைக்காக தன் காரில் காத்திருந்த சதீஷ் குமார், வேகமாக முரளி பிரசாத் வாகனத்தின் மீது மோதி, வாகனத்துடன் இழுத்துச் சென்றார்.

அப்போது சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீதும் கார் மோதியது. இதில், அவரும் துாக்கி வீசப்பட்டார். வீட்டின் சுற்றுச்சுவரின் இரும்பு கிரில்லில் ஒரு கால் சிக்கி தலைகீழாக தொங்கினார்.

அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், காயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், உர்வா போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசாரிடம் முரளி பிரசாத், நடந்த சம்பவத்தை கூறி, தன்னை கொல்ல முயற்சிப்பதாக புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷ் குமாரை கைது செய்தனர்.

அவரின் காரையும் பறிமுதல் செய்தனர். பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சுற்றுச்சுவரில் தலைகீழாக தொங்கி பெண்ணை மீட்ட அப்பகுதியினர்.






      Dinamalar
      Follow us