sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை

/

கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை

கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை

கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை

1


ADDED : ஜூலை 22, 2024 03:54 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 03:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள தாகேல் கிராம சாலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இறந்தவரின் உடலை ஆய்வு செய்ததில், அவரது கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு, தலையில் குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்த நபரின் பெயர் பிரிதிபி என்பது தெரியவந்தது.

காங்லீபெக் கம்யூனிஸ்ட் மக்கள் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த இவர், போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்லீபெக் கம்யூனிஸ்ட் மக்கள் கட்சி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் அமைப்புக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதுடன், அவப்பெயர் ஏற்படுத்தியதாலும் பிரிதிபி என்பவருக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை அளித்துள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us