sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயலில் மே தின விழா

/

தங்கவயலில் மே தின விழா

தங்கவயலில் மே தின விழா

தங்கவயலில் மே தின விழா


ADDED : மே 02, 2024 06:43 AM

Google News

ADDED : மே 02, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: மாரிகுப்பம் முதல் கோரமண்டல் வரை பல இடங்களில் நேற்று மே தின விழா கொண்டாடப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட்: கோலார் மாவட்ட செயலர் வக்கீல் ஜோதிபாசு தலைமையில் தங்கச் சுரங்க தொழிலாளர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாரிகுப்பம் கில்பர்ட்ஸ், ஸ்மித் ரோடு, உரிகம், கோரமண்டல் டாங்க் பிளாக், கென்னடிஸ் ஆகிய பகுதிகளில் கொடிகள் ஏற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. கட்டட தொழிலாளர் சங்கத் தலைவர் ஸ்ரீ குமார், ரஞ்சித், அம்பரிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ச் சங்கம்: தங்கவயல் தமிழ்ச்சங்கம் சார்பில் உரிமம் ஐந்து விளக்கு பகுதியில் உள்ள தங்கச் சுரங்க தொழிலாளர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தலைவர் கலையரசன், செயல் தலைவர் கமல் முனிசாமி, குமார், திருமுருகன், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தி.மு.க.: ராபர்ட்சன்பேட்டை பிரிட்சர்ட் சாலையில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் அறிவழகன் தலைமையில் விழா நடந்தது. தங்கவயல் தொழிலாளர் பெருமைகளை நினைவுகூர்ந்தனர். தி.மு.க., அலுவலகத்தில் தமிழ் மற்றும் கன்னடம் எழுதப்படிக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். முருகன், சீனிவாசன், தேவராஜ், ரவீந்திரன், கார்த்திக், குலோத்துங்கன், பூபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.: அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், அதன் மாநிலச் செயலர் அன்பு தலைமையில் ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் விழா நடந்தது. இதில், பழக்கடை கதிரவன், அசோக், புருஷோத்தமன், சவுந்தர், அனிதா ப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். மோர், எலுமிச்சை ரசம், தர்பூசணி வழங்கப்பட்டது.

1.05.2024/ ஜெயசீலன்

2_DMR_0007, 2_DMR_0008

அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மாநிலச் செயலர் அன்பு தலைமையில் பழரசம், தர்பூசணி வழங்கப்பட்டது. இடம்: காந்தி சதுக்கம், ராபர்ட்சன் பேட்டை. (அடுத்த படம்) தொழிலாளர் சிலைக்கு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இடம்: ஐந்து விளக்கு பகுதி, உரிகம்.






      Dinamalar
      Follow us