sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்

/

கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்

கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்

கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்


ADDED : மார் 03, 2025 02:10 AM

Google News

ADDED : மார் 03, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ,

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தன் அரசியல் வாரிசாக அறிவித்த சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை, கட்சி யின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வரான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார்.

இவரது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி அறிவித்து இருந்தார்.

கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, ஆகாஷ் ஆனந்தின் பதவியை பறித்த மாயாவதி, ஜூலையில் மீண்டும் பதவியை கொடுத்தார்.

அப்போது, ஆகாஷ் ஆனந்தை, தன் அரசியல் வாரிசாகவும் அறிவித்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டார்.

இதன்பின், மாயாவதி கூறியதாவது:

நான் உயிருடன் இருக்கும் வரை, என் அரசியல் வாரிசை அறிவிக்கப் போவதில்லை. இந்த கட்சியும், இயக்கமும் தான் எனக்கு முதன்மையானது. உறவினர்கள் அதற்கு பிறகு தான்.

ஆகாஷ் ஆனந்த் பதவி நீக்கப்பட்டதற்கு அவரது மாமனாரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான அசோக் சித்தார்த் தான் காரணம். அவர், கட்சியில் பிளவு ஏற்படுத்தியதுடன் பலவீனப்படுத்தவும் முயன்றார். அதோடு ஆகாஷ் ஆனந்தின் அரசியல் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி விரோத நடவடிக்கையில் அசோக் சித்தார்த் ஈடுபட்டதற்காக, கட்சியில் இருந்து அவரை, மாயாவதி கடந்த மாதம் நீக்கினார்.

நேற்றைய கூட்டத்துக்கு பின், தன் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ராம்ஜி கவுதம் ஆகியோரை தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துஉள்ளார்.






      Dinamalar
      Follow us