கேரளாவில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கேரளாவில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ADDED : ஆக 18, 2024 02:07 AM
மூணாறு:கேரளாவில் இன்று (ஆக., 18) முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச், எல்லோ அலர்ட் விடுத்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்: இன்று (ஆக., 18) இடுக்கி, கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்கள், நாளை (ஆக. 19) பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
எல்லோ அலர்ட்: இன்று (ஆக., 18) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், நாளை (ஆக., 19) இடுக்கி, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், ஆக., 20ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கும், ஆக., 21ல் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கும் 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

