ADDED : மே 23, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வரும் 25ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் தொடங்கும் என, டில்லி மெட்ரோ அறிவித்துள்ளது.
டில்லி ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதை முன்னிட்டு டி.எம்.ஆர்.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
டில்லியில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நாளான வரும் 25ம் தேதி அன்று அனைத்து வழித்தடங்களிலும் டில்லி மெட்ரோ ரயில் சேவை, அதிகாலை 4:00 மணிக்குத் தொடங்கும். இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், மெட்ரோ ரயிலை பயன்படுத்த முடியும்.
அன்று காலை 6:00 மணி வரையிலான ரயில்கள், 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6:00 மணிக்குப் பிறகு, வழக்கமான நேரத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுதும் இயங்கும்.

