ADDED : செப் 02, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்: இந்திய விமானப்படையின் போர் விமானம் ராஜஸ்தானில் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
நம் விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக போர் விமானம் ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தவிபத்தில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. இதில் விமானி காயமின்றி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது
தகவல் அறிந்தமீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்குசென்றுள்ளனர். . தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.