sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாலை, மேம்பாலப்பணிகளை முடுக்கிவிட்டார் அமைச்சர்

/

சாலை, மேம்பாலப்பணிகளை முடுக்கிவிட்டார் அமைச்சர்

சாலை, மேம்பாலப்பணிகளை முடுக்கிவிட்டார் அமைச்சர்

சாலை, மேம்பாலப்பணிகளை முடுக்கிவிட்டார் அமைச்சர்


ADDED : பிப் 27, 2025 10:25 PM

Google News

ADDED : பிப் 27, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தவும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா உத்தரவிட்டார்.

புதிய பா.ஜ., அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக பர்வேஷ் வர்மா பதவியேற்றார். அதன்பின் தேசிய தலைநகரில் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்திருந்த சாலைகள், சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சேதமடைந்த ஒரு மதகு ஒன்றை அவர் ஆய்வு செய்தார்.

பணிகளுக்கான டெண்டர் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கும் பணிகள் துவங்கும் என, குடியிருப்பாளர்களுக்கு அமைச்சர் பர்வேஷ் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது, எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், எம்.எல்.ஏ., நீரஜ் பைசோயா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருந்தனர்.

ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறியதாவது:

பராபுல்லா (புலியா) கட்டுமானப் பணிகளை இன்று (நேற்று) ஆய்வு செய்தேன். ஏப்ரல் மாதத்தில் கட்டுமானப் பணிகளைத் துவங்கி நான்கு மாதங்களுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சாலை பராபுல்லாவிற்கு வழிவகுக்கிறது. பயணியருக்கு ஒரு முக்கியமான வழித்தடமாகும். முந்தைய அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக, பராபுல்லா திட்டத்தின் செலவு, அதன் அசல் மதிப்பீட்டை விட இரட்டிப்பாகியுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி அரசின் எந்த அமைச்சரும் கடந்த பத்து ஆண்டுகளில் இதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்த இடத்திற்கு வருகை தரவில்லை.

ஆட்சி அமைத்த ஒரு வாரத்திற்குள், நிலைமையை மதிப்பிடுவதற்கும், மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கும் அதிகாரிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்று (நேற்று), பொதுப்பணித் துறை மற்றும் வெள்ள மேலாண்மை அதிகாரிகளுக்கு சாக்கடைகள், நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணியைத் துவங்கவும், மேம்பாலங்களின் கீழ் நடைபாதைகளை அழகுபடுத்தவும் திட்டங்கள் தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள மேம்பாலத் திட்டங்களை மீண்டும் துவங்கவும், ஐந்து மேம்பாலங்களின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us